×

செல்லாண்டிபாளையம் பாசன வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள்

கரூர், மே 3: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட செல்லாண்டிபாளையம் பாசன வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள பிளாஸ்டிக் கழிவுகள் அகற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் செட்டிப்பாளையம் தடுப்பணையில் இருந்து அமராவதி ஆற்றுப்பாசன நீரை பாசனத்திற்கு அனைத்து விவசாயிகளும் பயன்படுத்தும் வகையில் பாசன வாய்க்கால்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. அதுபோன்ற பாசன வாய்க்கால், கரூர் மாநகராட்சிக்குடபட்ட செல்லாண்டிபாளையம் வழியாக செல்கிறது. இநத பாசன வாய்க்கால் சரிவர பராமரிக்காத காரணத்தினால் வாய்க்காலில் அதிகளவு பிளாஸ்டிக் கழிவுகள் படர்ந்து வாய்க்கால் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. வாய்க்காலில் தண்ணீர் வரும் சமயங்களில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட அதிகளவு வாய்ப்புகள் உள்ளது எனவும் கூறப்படுகிறது. எனவே, அனைவரின் நலன் கருதி இந்த வாய்க்காலில் படர்ந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை முற்றிலும் அகற்ற தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

The post செல்லாண்டிபாளையம் பாசன வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள் appeared first on Dinakaran.

Tags : Sellandipalayam ,Karur ,Chellandipalayam ,Karur Corporation ,Amaravati ,Chettipalayam ,Karur district ,Dinakaran ,
× RELATED கரூர் சுங்ககேட் அருகே அடையாளம் தெரியாத நபர் மயங்கி விழுந்து சாவு